இஸ்லாமும் கம்யுனிசமும் ஒரு சிறிய பார்வை


இஸ்லாம் மக்களுக்கு நல்லதையே செய்திட வேண்டும் என்று வாதாடுகின்றதுஎல்லாகாலங்களுக்கும்எல்லா சமுதாயங்களுக்கும் இஸ்லாம் ஒன்றேதான் வழிகட்ட வல்லமார்க்கம்கடந்த நான்கு நூற்றாண்டுகளாக இஸ்லாமிய செயலிழந்து ஒருவித மந்தநிலையில் இருந்து வருவதால் இஸ்லத்தின் பொருளாதாரச் சட்டங்களும்செயலற்றவைகளாக இருந்து விட்டன.

அப்படியானால் ஏன் நாம் நமது ஆன்மாவை தூய்மைப்படுத்திட இஸ்லாத்தையும்,நமதுபொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வு கண்டிட கம்யூனிஸத்தையும் பின்பற்றக் கூடாது?அப்படி செய்வதனால் கம்யூனிஸம் நமது சமுதாய அமைப்பையோ அல்லது சமுதாயஅமைப்பின் ஏதேனும் ஒரு பகுதியையே பாதிக்காது.

இதனால் நாம் நமது ஒழுக்கப்பண்புகள்நமது சமுதாய நடைமுறைகள்பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை பாதுகாக்கின்றவர்களாகவும்அதே நேரத்தில் நமதுபொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிட மிகவும் நவீனமானதொருகொள்கையும் கொண்டவர்களாக திகழலாம்.
இப்படி ஒரு கருத்தை எடுத்து வைத்து முஸ்லிம்களிடையே சபலத்தை ஏற்படுத்துவதுகம்யூனிஸ்டுகளின் நீண்ட கால சூழ்ச்சியின் நவீன கண்டுபிடிப்பாகும்.

முதலில் அவர்கள் கீழை நாடுகளில் வாழ்ந்த முஸ்லிம்களிடையே பல்வேறுசந்தேகங்களை ஏற்படுத்தி இஸ்லாத்தை எதிர்த்திட தலைப்பட்டனர்இதனால்முஸ்லிம்களிடம் இஸ்லாத்தின்பால் இருந்த பிடிப்பு அதிகரித்திடவே செய்தது இதைகண்ட கம்யூனிஸ்ட்கள்  தங்களுடைய தக்குதலை பசப்பு வார்த்தைகளால் திசைதிருப்புகிறார்கள்.

கம்யூனிஸம் என்பது சமுதாயத்தில் நீதியை நிலை நாட்டுதல் என்பதன் மற்றொருபெயரேயாகும்.கம்யூனிஸம்அரசு தனது குடிமக்களின் அத்தியாவசிய தேவைகளைபூர்த்தி செய்திட கடமைப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்துகின்றது,இஸ்லாம்இவற்றையே அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லுகின்றது.ஆகவே கம்யூனிஸம்இஸ்லாத்தின் எதிரியல்ல.

இஸ்லாம் கம்யூஸத்தின் எதிரி என்று சொன்னால்,இஸ்லாம் சமுதாயத்தில் நீதியைநிலைநாட்டிட விரும்பவில்லை என்று பொருளாகிவிடும்இப்படி யாராவதுசொல்வார்களாநிச்சயமாக சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட எந்தக்கொள்கையையும் இஸ்லாம் எதிர்ப்பதில்லை.

இப்படி பசப்பு மொழி பேசி ஏமாற்ற முயற்சிக்கின்றார்கள் கம்யூனிஸ்ட்கள்.
இத்தகைய ‘சூழ்ச்சிவாதம்’ இதற்கு முன்னால் ஏகாதிபத்தியவாதிகளால் எடுத்துவைக்கப்பட்டதேயாகும்இந்த ஏகாதிபத்தியவாதிகளும்முதலில் இஸ்லாத்தின் மீதுஎதிர்ப்புக் கணைகளையே எடுத்து வீசினார்ஆனால் அவை முஸ்லிம்களைசலனப்படுத்தவில்லை

மாறாக முஸ்லிம்கள் தங்களை இதுபோன்ற பிதற்றல் வாதங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தலைப்பட்டனர்.தங்களுடைய எதிர்ப்புவாதம் எடுபடாமல் போகவே அவர்கள்வேறு விதமாக சூழ்ச்சியைத் திருப்பினர்
அப்போது அவர்கள் மேற்கொண்ட தந்திரவாதம் இதுதான்:மேலை நாடுகள் கீழைநாடுகளில் சிறந்ததொரு கலாச்சாரத்தை பரப்பிடவே முனைகின்றனஇஸ்லாம்எவ்வாறு கலாச்சராத்தை –நல்ல  பண்பாட்டை எதிர்க்கும்அதுதான் பண்பாட்டின்பாசறையாயிற்றே” இதோடு அவர்கள் விடவில்லை.


நீங்கள் இந்த மேலைநாட்டு நாகரிகத்தை கடைப் பிடியுங்கள்.அதே நேரத்தில் நீங்கள்உங்கள் மதம் விரும்புவது போல் நோன்பிருங்கள்தொழுகையும் நிறைவேற்றுங்கள்என்றும் சொன்னார்கள்.
ஒரு முறை இந்த முஸ்லிம்கள் மேலைநாட்டு நாகரிகத்தினுள்வந்துவிட்டார்களேயானால்அவர்கள் தங்களது மதத்தை மறக்கஆரம்பித்துவிடுவார்கள்காலப்போக்கில் முஸ்லிம்கள் மேலைநாட்டு நாகரிகத்தில்மூழ்கி இஸ்லாத்தை மறந்துவிடுவார்கள் என்பதே அவர்களின் திட்டம்.இதையேஅவர்கள் நிறுபித்துக் காட்டினார்.

இதன் விளைவாக காலப்போக்கில் இஸ்லாம் என்றால் என்ன எனபதையே தெரியாதஒரு தலைமுறை தோன்றியதுஇவர்கள் இஸ்லாத்தைப் பற்றி அறியுமுன்னேஎந்தக்காரணமும் இல்லாமல் இஸ்லாத்தை வெறுக்க ஆரம்பித்தனர்.

இதே சூழ்ச்சி முறையைத்தான் கம்யூனிஸ்ட்கள் இன்று பின்பற்றிட முயற்சிக்கின்றனார்அவர்கள் சொல்லுகிறார்கள்முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவே இருக்கட்டும்;தொழுகைகையை நிறைவேற்றட்டும்நோன்பிருக்கட்டும்இன்னும் இதுபோன்றகடமைகளை தடையின்றி நிறைவேற்றட்டும்நோன்பிருக்கட்டும்;இன்னும் இது போன்றகடமைகளை தடையின்றி நிறைவேற்றட்டும்கம்யூனிஸத்தை அவர்களின்பொருளாதாரக் கொள்கையாக மட்டும் ஏற்றுக் கொள்ளட்டும் ஏனெனில் கம்யூனிஸம்எந்த விதத்திலும் இஸ்லாத்திற்கு எதிரானது அல்லஅப்படி இருக்க முஸ்லிம்கள்கம்யூனிஸத்தை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம்?

முஸ்லிம்கள் ஒரு முறை கம்யூனிஸத்தை ஏற்றுக்கொள்வார்களேயானால்,காலப்போக்கில் அவர்கள் கம்யூனிஸத்தால் ஆட்கொள்ளப்பட்டுவிடுவர்அதன் மூலம்இஸ்லாத்தையும் இஸ்லாம் இந்த உலகில் சாதிக்க விரும்பும் இலட்சியத்தையும்மூட்டை கட்டிவைத்துவிடுவார்கள்ஏனெனில் நாம் வாழும் உலகம் விரைவானமாற்றங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறதுஅதில் பெரிய மாற்றங்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறது.அதில் பெரிய மாற்றங்களைக் கூடச் செய்வதற்கு சிறிதளவு காலமேபோதுமானது.

இதைத் தெரிந்திருந்தும்சில முஸ்லிம்கள் தங்களை கம்யூனிஸத்திற்குஅடிமைப்படுத்திக் கொண்டார்கள்ஏனெனில் கம்யூனிஸத்தை ஏற்றுக் கொள்வதன்மூலம் அவர்கள் முஸ்லிம்கள் என்ற வகையில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளைதவிர்த்துக் கொள்ளலாம்.தாங்கள் சிந்தனையில் ஈடுபடதேவை இல்லைசிலஇலட்சியங்களை நோக்கி நடப்பதில் ஏற்படும் கஷ்டங்களுக்கு ஆளாவதிலிருந்துதவிர்ந்துக் கொள்ளலாம்.

இன்னும் இதுபோன்ற மனோ நிலையைக் கொண்ட முஸ்லிம்கள் ஒரு இடத்தில்உட்கார்ந்து கொண்டு கற்பனை உலகில் சஞ்சரிப்பதை நாடுகின்றனர்தாங்களே சிந்தித்துதங்களது வழியைத் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக தங்களை அடுத்தவர்கள் வழிநடத்தட்டும் என்று வாளா இருந்து விடுகின்றனர்.

இங்கே நாம் ஒன்றைக் கவணிக்கவேண்டும்அதாவது இஸ்லாம்தனதுகொள்கைகளுக்கு எதிராக இல்லாத கொள்கைகளை  எதிர்ப்பதில்லை.
உண்மை என்னவெனில் கம்யூனிஸம் இஸ்லாத்தின் கொள்கையை ஒத்ததல்லஓரிருவிஷயங்களில் அது இஸ்லாத்தைப் போன்று காட்சியளித்தாலும்உண்மையில் அதுஇஸ்லாத்தைப் போன்ற ஒன்றல்ல.

தங்களிடம் ஏற்கனவே வலுவானதொரு கொள்கையை கொண்டிருக்கும் முஸ்லிம்கள்,கம்யூனிஸத்தையோ அல்லது முதலாளித்துவத்தையோ அல்லது சோஷயலிசத்தையோஏற்றுக்கொள்ள தேவை இல்லை. இவைகள் ஓரிரு விஷயங்களில் இஸ்லாத்தைப்போல்காட்சியளிப்பினும் சரியே!

இறைவன் திருமறையில் கூறுகின்றான்:
அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோஅவர்கள்தான்பாவிகளாவார்கள்”(அல்குர்ஆன் 5:47)

நாம் உண்மையிலேயே கம்யூனிஸத்தை ஏற்றுக் கொள்ளலாமா?
அப்படி அதை ஏற்றுக்கொண்ட பின்னரும் முஸ்லிம்களாக வாழலாமாவாழ முடியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக