புகை பிடிப்பதை நிறுத்தினால்..!


புகைப் பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 55 லட்சமாக இருக்கிறது. இதில், 5 லட்சம்பேர் இந்தியர்கள் என்கிறது புள்ளி விவரம். எய்ட்ஸ் நோய், காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படும் சைலென்ட் மரணம் அதிகமாக இருக்கிறது.
புகையிலையில் சுமார் 4,000 ரசாயனப் பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 30-க்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை. குறிப்பாக ஹைட்ரஜன் சயனைட், அமோனியம், ஆர்சனிக், மெத்தனால், கார்பன் மோனாக்ஸைட், தார், நிக்கோடின், நைட்ரிக் ஆக்ஸைட், பாதரசம் போன்றவையாகும்.
சிகரெட், பீடி பழக்கத்தை கைவிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இருதய மருத்துவர் ஆர்.ரவிக்குமாரிடம் கேட்டோம்.
''சிகரெட் பழக்கத்தை விட்ட, உடனே ரத்த அழுத்தம் மற்றும் இருதய துடிப்பு மேம்பட ஆரம்பித்துவிடுகிறது. அதாவது, புகைப்பதை விட்ட இருபதாவது நிமிடத்தில் ரத்த அழுத்தமும் நாடி துடிப்பும் நார்மல் நிலைக்கு வந்துவிடுகிறது. ஆறுமாத காலத்துக்குள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. மேலும், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று பாதிப்பு போன்றவை குறைகிறது. நீண்ட காலத்தில் ஆண் மற்றும் பெண் களின் குழந்தை பிறப்புக்கான ஆற்றல் அதிகரிக்க தொடங்கும். இப்படி ஏராளமான நன்மைகள் புகைப் பழக்கத்தை விட்ட நேரத்திலிருந்து தொடங்கி விடுகிறது.'' என்றார்.  
பலர் புகைப் பழக்கத்தால் தங்கள் உடம்பை கெடுத்துக் கொள்வதோடு, தங்களின் பர்ஸையும் இளைக்க வைக்கிறார்கள். சிகரெட் ஒரு மனிதனின் பொருளாதாரத்தை எப்படி பாதிக்கிறது என்கிற விவரத்தை பார்ப்போம்.

ஒரு சின்ன கணக்கீடு உங்களுக்காக...!
பொதுவாக சிகரெட்டுக்காக சாதாரணமாக மாதத்துக்கு குறைந்தது 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை செலவிடுகிறார்கள். இந்த தொகையை சேர்த்து வைத்தால் வாழ்க்கையின் பல விஷயங்களை, இதைக் கொண்டே சமாளிக்க முடியும். உதாரணத்துக்கு ஒருவர் தன் 20-வது வயதில் சிகரெட்டுக்காக மாதம் 500 ரூபாய் செலவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். தன் 50-வது வயது வரையில் சிகரெட்டுக்காக மட்டும் 1.8 லட்ச ரூபாய் செலவழித்திருப்பார். இதை 8% வருமானம் தரும் ஏதாவது ஒரு திட்டத்தில் போட்டிருந்தால் அது 7.09 லட்ச ரூபாயாக அதிகரித்திருக்கும். இதே வயதுள்ள ஒருவர் மாதம் 1,000 ரூபாய் சிகரெட்டுக்காக செலவிட்டு இருந்தால் அவர் 50-வது வயது வரையில் 3.6 லட்ச ரூபாய் செலவிட்டிருப்பார். இதை அவர் முன் குறிப்பிட்ட 8% வருமான திட்டம் ஏதாவது ஒன்றில் போட்டிருந்தால் அது 10.58 லட்ச ரூபாயாக பெருகி இருக்கும். இந்தத் தொகையை கொண்டு சிறு நகரமாக இருந்தால் மனையோ, வீடோ கூட வாங்கி இருக்கலாம். பெருநகரங்களில் கூடுதலாக சில லட்சங்களைப் போட்டால் மனை வாங்க முடியும்.'' என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.
என்ன யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? விரல்களில் சிகரெட் இல்லாமல்தானே?

இணையற்ற லாபம் தரும் இயற்கை அரிசி!



வெளவால் எச்சமும் உரம்.
மகசூலைக் கூட்டும் முருங்கைச்சாறு.
அரிசியாக அரைத்தால் கூடுதல் லாபம்.
பண்ணைக்குள்ளேயே இருக்கும் பொருட்கள், கழிவுகள் போன்றவற்றைப் பயன்படுத்தியே 'தற்சார்பு வேளாண்மை’ செய்வதுதான் இயற்கை வழி  விவசாயத்தின் தத்துவம். அதனால்தான், இயற்கை வழி விவசாயத்துக்கு மாறும் விவசாயிகள் பலரும், பண்ணையில் கிடைக்கும் பொருட்களை வைத்தே, புதுப்புது யுக்திகளை மேற்கொண்டு, வெற்றிக் கொடி பறக்க விட்டுக் கொண்டுள்ளனர்.
இங்கே... முருங்கைக்கீரைச் சாறு மற்றும் வெளவால் எச்சம் ஆகியவற்றையே இடுபொருட்களாகப் பயன்படுத்தி, ஆச்சரியமூட்டும் வகையில் நெல் சாகுபடி செய்து வரும் தஞ்சாவூர் மாவட்டம், இரும்புத்தலை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் மற்றும் அவருடைய மகன் முத்துக்குமார் ஆகியோரை இப்போது நாம் சந்திக்கிறோம்.
உற்சாகமாகப் பேச்சைத் தொடங்கும் முத்துக்குமார், ''ஈரோடு, திண்டல்

முதல் வருடம் மகசூல் குறைவு!
பகுதியில 'பசுமை விகடன்’ நடத்தின 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி முகாமுல கலந்துக்கிட்ட பிறகுதான், இயற்கை வழி விவசாயத்துக்கு நாங்க மாறினோம். பயிற்சி முடிஞ்சு வந்த கையோட நாட்டு ரகமான ரெண்டு சிந்துக் காளை, 4 கிடை இனப் பசுக்களை வாங்கிட்டோம். அதுங்க மூலமா கிடைச்ச கழிவுகளை வெச்சு... ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம்னு தயாரிக்க ஆரம்பிச்சு, முழு ஜீரோ பட்ஜெட்டுக்கு மாறிட்டோம்'' என்று சொல்லிவிட்டு, படிப்படியாக தாங்களின் சாகுபடி பற்றி விவரித்தார்.
''முதல் வருஷம் ஏ.டி.டி-43 ரக நெல் போட்டோம். ஏக்கருக்கு 8 சென்ட்டுங்ற கணக்குல நாற்றங்கால் அமைச்சு, 300 கிலோ தொழுவுரம், 10 கிலோ கனஜீவாமிர்தம் போட்டு, ஜீவாமிர்தம் எல்லாம் விட்டோம். முப்பது நாள் ஆகியும் முக்கால் அடி உயரத்துக்குதான் நாத்து வளர்ந்திருந்துச்சு.
சரி நடவு செய்து பார்ப்போம்னு, அதைப் பறிச்சு நட்டோம். ஏக்கருக்கு 300 கிலோ தொழுவுரம், 100 கிலோ கனஜீவாமிர்தம், மூணு தடவை பாசனத் தண்ணியில ஜீவாமிர்தம்னு எல்லாம் சரியா கொடுத்தோம். ஆனா... பெரியளவுல பயிர் வளர்ச்சி இல்லை. ஏக்கருக்கு 24 மூட்டைதான் (60 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சுது. இயற்கைக்கு மாறும்போது, ஆரம்பத்துல மகசூல் குறைச்சலாத்தான் கிடைக்கும்.
அதனால, 'இயற்கை முறையிலேயே சீக்கிரமா விளைச்சலை எப்படிக் கூட்டுறது?’னு யோசிக்க ஆரம்பிச்சோம்.
யோசனையில் விளைந்த சோதனை !
எங்களுக்குச் சொந்தமான பழங்காலக் கட்டடம் இருந்துச்சு. அதை யாரும் புழங்குறது இல்லைங்கறதால ஏகப்பட்ட வெளவால்கள் அதுல இருந்துச்சு. தரை முழுக்க வெளவால் எச்சமா கிடக்கும். அதைப் பாக்குறதுக்கு மண்புழு உரம் மாதிரியே இருக்கும். 'அதை அள்ளி நிலத்துல போட்டா என்ன?’னு தோணுச்சு. அதை செயல்படுத்தலாம்னு இறங்கினப்போதான்... 'முருங்கைக்கீரைச் சாறும் தெளிச்சுப் பார்ப்போம்’னு அவருக்குத் தோணின யோசனையைச் சொன்னார் அப்பா.
நம்பிக்கை கொடுத்த வெளவால் எச்சம் முருங்கைச்சாறு!
அடுத்த போகத்துலேயே ஏ.டி.டி-43 ரக நெல்லுக்கு நாற்றங்கால்ல இருந்தே வெளவால் எச்சம், முருங்கைக்கீரைச் சாறு, கனஜீவாமிர்தம் எல்லாத்தையும் கொடுக்க ஆரம்பிச்சோம். எதிர்பார்த்த மாதிரியே முப்பது நாள்ல ஒரு அடி உயரத்துக்கு செழிப்பா வளந்துடுச்சு. எடுத்து நடவு செஞ்சப்ப முன்றரையடி உயரத்துக்கு பயிர் வளர்ந்துடுச்சு.
பச்சை பிடிக்காததால் பூச்சிகள் தாக்கவில்லை!
ரசாயன உரம் கொடுக்குறப்போ... பயிர் கருகருனு பச்சையா இருக்கும். அதனாலயே ஏகப்பட்ட பூச்சிங்க தாக்கும். ஆனா, இயற்கை உரம் போட்டப்ப வெளிர் பச்சையாவே பயிர் இருந்ததால... பூச்சித் தாக்குதல் இல்லவே இல்லை.
ஏக்கருக்கு 27 மூட்டைங்கிற கணக்குல மகசூல் கிடைச்சுது. அதுக்கடுத்த வருஷம் 30 மூட்டை கிடைச்சுது'' என்று நிம்மதி பெருமூச்சுவிட்ட முத்துக்குமார்,
பாரம்பரிய ரகத்திலும் நிறைவான மகசூல் !
''இந்த வருஷம் குறுவை சாகுபடியில மூணு ஏக்கர் கருங்குருவை, மூணு ஏக்கர் வெள்ளங்கார், மூணு ஏக்கர் பூங்கார்னு பாரம்பரிய ரகங்கள சாகுபடி செஞ்சோம். நாத்து விடாம நேரடியாவே விதையைத் தெளிச்சுட்டோம். ஏ.டி.டி-43 ரகத்துக்கு செய்த மாதிரியே ஜீவாமிர்தம், முருங்கைச்சாறு, வெளவால் எச்சம் இதைத்தான் கொடுத்தோம். ஏக்கருக்கு 18 மூட்டை வரைக்கும் மகசூல் கிடைச்சுது. பாரம்பரிய ரகங்களைப் பொருத்தவரைக்கும் இதுவே நல்ல நிறைவான மகசூல்தான்'' என்று மனநிறைவோடு சொல்லி நிறுத்தினார்.
விற்பனைக்கு உதவிய பசுமை விகடன்!
அவரைத் தொடர்ந்த நாகராஜன், ''ரசாயனத்துல சாகுபடி செய்தப்போ அறுவடை முடிஞ்சதும் அப்படியே நெல்லாவே வித்துடுவோம். ஆனா, 'பசுமை விகடன்’ல வர்ற கட்டுரைகளையெல்லாம் படிச்ச பிறகு, மதிப்புக் கூட்டி வித்தா கூடுதல் லாபம்னு தெரிஞ்சிக்கிட்டு, அரிசியா அரைச்சு விக்க ஆரம்பிச்சோம். அதுக்கும்கூட பசுமை விகடன்ல வர்ற 'வாங்க, விற்க’ பகுதியே எங்களுக்கு உதவியா இருக்கு. இதன் மூலமாவே எங்களோட இயற்கை அரிசிக்கு தமிழ்நாடு முழுக்க ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் கிடைச்சுருக்காங்க.
ஒரு ஏக்கர்ல விளைஞ்ச 1,800 கிலோ ஏ.டி.டி-43 ரக நெல்லை விலைக்குக் கொடுக்கறப்ப, 18 ஆயிரம் ரூபாய்தான் வருமானம். ஆனா, அரிசியா அரைக்கும்போது.. 1,125 கிலோ கிடைக்குது. இயற்கை வழி விவசாயத்துல விளைஞ்ச அரிசிங்கிறதால கிலோ 35 ரூபாய்க்கு விற்க முடியும். இதன் மூலமா ஏக்கருக்கு 39,375 ரூபாய் வருமானம் கிடைக்கும். எல்லா செலவும் போக... ஏக்கருக்கு 29 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபமா கிடைக்கும்'' என்று சொன்ன நாகராஜன்,
''இயற்கை வழி விவசாயம் நன்றாகவே கைகொடுக்குது. இந்த நம்பிக்கையோட சென்னை, குரோம்பேட்டையில இயற்கை அங்காடி திறக்கப் போறேன். என் தோட்டத்துல விளையற பொருட்களை அங்க விற்பனை செய்யப் போறேன்' என்று அடுத்த அடி எடுத்து வைக்கும் திட்டத்தையும் சொன்னார் நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியோடு!

இப்படித்தான் சாகுபடி செய்யணும்...  
வெளவால் எச்சம், முருங்கைக்கீரைச் சாறு ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஒரு ஏக்கரில் ஏ.டி.டி-43 ரக நெல்லை முத்துக்குமார் மற்றும் நாகராஜன் சாகுபடி செய்யும் தொழில்நுட்பம் இதோ-
ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு, 8 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். அதில், 10 கிலோ கனஜீவாமிர்தம், 2 கிலோ வெளவால் எச்சம் ஆகியவற்றைப் போட்டுப் பரப்பி, 25 கிலோ ஏ.டி.டி-43 ரக விதைநெல்லைத் தெளித்து, வழக்கமான முறையில் தண்ணீர் கட்ட வேண்டும். 15-ம் நாள் 3 லிட்டர் முருங்கைக்கீரைச் சாறு தெளிக்க வேண்டும் (5 கிலோ முருங்கைக்கீரைகளை குச்சி இல்லாமல், ஆய்ந்து அரைத்து, 15 லிட்டர் தண்ணீருடன் கலந்து வடிகட்டினால்... முருங்கைக்கீரைச் சாறு தயார்).
ஒரு ஏக்கர் சாகுபடி நிலத்தை உழுது பரம்படித்து, 100 கிலோ கனஜீவாமிர்தம், 10 கிலோ வெளவால் எச்சம் ஆகியவற்றைப் போட்டு, 30 நாள் வயதான நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். 15-ம் நாள் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். 20-ம் நாள் 15 லிட்டர் முருங்கைக்கீரைச் சாறை, 115 லிட்டர் தண்ணீரில் கலந்து, வயல் முழுவதும் தெளிக்க வேண்டும். 40-ம் நாள் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். இதற்குப்பிறகு வேறு எந்த இடுபொருட்களுமே தரத் தேவையில்லை.


தொடர்புக்கு
நாகராஜன், அலைபேசி: 99443-44608,
முத்துக்குமார், அலைபேசி: 99949-01135


கவலையில்லாத வருமானம் தரும் கலப்பினம்!


ஒரு வருடத்தில் 45 கிலோ எடை.
வருடத்துக்கு 450 குட்டிகள்.

சிறு மற்றும் குறு விவசாயிகளாக இருந்தாலும் சரி... பெரு விவசாயிகளாக இருந்தாலும் சரி... அவர்களுக்கு ஆபத்து நேரங்களில் கை கொடுப்பது கால்நடை வளர்ப்புதான். அதிலும் குறைந்த முதலீடு, குறைந்த பராமரிப்பில் அதிக லாபம் ஈட்டிக் கொடுப்பது ஆடு வளர்ப்புதான். தற்போது விவசாய நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் எல்லாம் சுருங்கிக் கொண்டே வரும் சூழ்நிலையில், 'கொட்டில் முறை ஆடு வளர்ப்பு’ விவசாயிகளிடையே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தலைச்சேரி மற்றும் போயர் ஆடுகளைக் கலப்பினம் செய்து, கொட்டில் முறையில் வளர்த்து வருகிறார், விழுப்புரம் மாவட்டம், திருநந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன். 

''எங்கப்பா, பால் பண்ணை வெச்சுருந்தார். அதனால, எனக்கு சின்ன வயசுல இருந்தே கால்நடை வளர்ப்புல ஈடுபாடு அதிகம். ஆனா, சூழ்நிலையால பிசியோதெரபி படிச்சுட்டு வேலைக்குச் சேர்ந்தேன். அதுல கிடைச்ச வருமானம்... திருப்தியா இல்லை. அதனால, தொழிலை மாத்தலாம்னு யோசிப்பதான், 'ஆடு வளக்கலாம்'னு தோணுச்சு. உடனே அது சம்பந்தமான விஷயங்களைத் தேடி அலைய ஆரம்பிச்சேன். அப்போதான் கொட்டில் முறை பத்தியும், கலப்பினங்களைப் பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன். உடனே ஆடு வளர்ப்புல இறங்கிட்டேன்' என்று உற்சாகமாக ஆரம்பித்த வெங்கடேசன், தொடர்ந்தார்.  
பிஸியோதெரபியிலிருந்து ஆடு வளர்ப்புக்கு!  
அதிக எடைக்கு போயர் ஆடுகள்!
'போயர் ரக ஆடுதான் சீக்கிரமாவே அதிக எடைக்கு வந்துடும்னு சொன்னாங்க. அதனால மகாராஷ்டிரா மாநிலத்துல இருந்து ஒரிஜினல் போயர் ரகத்துல 18 பெட்டைகளையும், 2 கிடா ஆடுகளையும் வாங்கிட்டு வந்தேன். அதோட தலைச்சேரி, சிரோஹி, கன்னியாடு, கொடியாடு ரக பெட்டைகளையும் வாங்கினேன். ஒவ்வொரு இனத்தோடயும் போயர் கிடாக்களைக் கலப்பு செஞ்சு பாத்ததுல, தலைச்சேரி இனத்தோட கலப்பு செஞ்சு பிறந்த குட்டிக மத்ததுகளவிட சாதுவாவும் ஆரோக்கியமாவும் இருந்துச்சு. அதோட ஒரே ஈத்துல மூணு குட்டிக வரைக்கும் பிறந்துச்சு. அதனால மத்த இனங்களையெல்லாம் ஒதுக்கிட்டு, 100 தலைச்சேரி பெட்டைகளை மட்டும் வாங்கினேன். இப்போ போயர் கிடா, தலைச்சேரி பெட்டைகளை மட்டும் கலந்து கலப்பினக் குட்டிகளை பெருக்கிட்டிருக்கேன். தனியா, சுத்தமான போயர் ரகத்தையும் பெருக்கிட்டிருக்கேன்.
அறிவியல் முறையில் ஆடு வளர்ப்பு!
எங்கிட்ட இருக்குற எல்லா ஆடுகளையும் பத்தி கம்ப்யூட்டர்ல பதிவு பண்ணி வெச்சுடுவேன். ஆட்டோட வயசு, எத்தனை முறை குட்டி போட்டிருக்கு, எத்தனை குட்டிக, எப்போ கிடாவோட சேர்த்தோம், என்னென்ன வைத்தியம் பார்த்திருக்கோம்னு அத்தனைத் தகவலும் பட்டணைத் தட்டுனவுடனே கிடைச்சுடும். அதனால ஒழுங்கா குட்டி ஈனாத, அடிக்கடி நோய் தாக்குற ஆடுகளையெல்லாம் கழிச்சு, நஷ்டத்தைக் குறைச்சுட முடியுது. வருமானமும் கூடுது.
பராமரிப்பு எளிது!
இப்போ என்கிட்ட போயர் இனத்துல 12 கிடா, 24 பெட்டை; தலைச்சேரி இனத்துல 106 பெட்டை; கலப்பினத்துல 94 ஆடுகள்னு மொத்தம் 236 ஆடு இருக்கு. இதுபோக மொத்தமா 40 குட்டிகளும் இருக்கு. இந்த ஆடுகளுக்காக 5 ஏக்கர் நிலத்துல கோ-4, கோ-3, கோ.எஸ்.எஃப்-29, சவுண்டல் (சூபாபுல்), கல்யாணமுருங்கை, கிளரிசீடியானு பசுந்தீவனங்களையும் வளர்த்துக்கிட்டிருக்கேன். கொட்டில் முறைங்கறதால பெரிசா பராமரிப்பு வேலைகள் கிடையாது. ரெண்டு பேர்தான் மொத்தப் பண்ணையையும் பராமரிச்சுட்டிருக்காங்க' என்ற வெங்கடேசன் வளர்ப்பு முறைகளைப் பற்றி பாடமே நடத்த ஆரம்பித்துவிட்டார் இப்படி-
தீவனம்தான் முதலில்!
''ஆடு வளர்ப்பில் இறங்கலாம் என்று தீர்மானித்த உடனேயே, முதலில் பசுந்தீவனங்களை வளர்க்க ஆரம்பித்துவிட வேண்டும். ஓரளவுக்கு தீவனங்கள் தயாரான பிறகு, நாம் வளர்க்கப் போகும் ஆடுகளின் எண்ணிக்கை, நம்மிடமுள்ள இட வசதி, பொருளாதார வசதி ஆகியவற்றுக்கேற்ப ஆடுகளுக்கான கொட்டிலை அமைத்துக் கொள்ளலாம். ஒரு ஆட்டுக்கு, சராசரியாக 20 சதுர அடி இடம் இருக்க வேண்டும். பொதுவாகக் கொட்டிலின் அகலம் 25 அடி அளவில் வைத்துக் கொள்வது நல்லது. நீளத்தைத் தேவையான அளவுக்கு அமைத்துக் கொள்ளலாம். தரையில் இருந்து நான்கு அடி உயரத்தில் கிழக்கு-மேற்காக நீளவாக்கில் கொட்டிலை அமைக்க வேண்டும். ஆடுகளின் கால்கள் சிக்கிக் கொள்ளாத அளவுக்கு இடைவெளி கொடுத்து, மர ரீப்பர்கள் மூலம் கொட்டிலின் அடிப்பகுதியை அமைத்துக் கொள்ள வேண்டும்.
வேறு வேறு இடங்களில் வாங்க வேண்டும்!
தாய் மற்றும் 20 நாட்கள் குட்டி; 20 நாட்கள் முதல் 3 மாத வயது; 3 மாதம் முதல் 6 மாத வயது; 6 மாத வயதுக்கு மேல் உள்ள ஆடுகள்; இளம் சினையாடுகள்; முற்றிய சினையாடுகள்; கிடாக்கள் என ஆடுகளை ஏழு வகைப்படுத்தி தனித்தனியாகப் பிரித்து அடைப்பது முக்கியம். அதனால், இந்த ஏழு வகைக்கும் தேவைப்படும் வசதிகளை சரிவர செய்து கொள்ள வேண்டும். பிறகு, ஆடுகளை வாங்கி வந்து வளர்க்க ஆரம்பிக்கலாம்.
போயர் கிடாக்களை ஒரு பண்ணையிலும், தலைச்சேரி பெட்டைகளை வேறு பண்ணையிலும் வாங்க வேண்டும். முடிந்தளவுக்கு வெவ்வேறு பண்ணைகளில் ஆடுகளை வாங்கி வருவது நல்லது. அப்போதுதான் மரபணு குறைபாடுகள் இல்லாத குட்டிகளை உருவாக்க முடியும்.
பொலி கிடாவுக்கு 2 வயது இருக்க வேண்டும்!
ஆறு மாத வயதுக்கு மேல் பெட்டைகள் பருவத்துக்கு வரும். இடைவிடாமல் கத்திக் கொண்டும் வாலை ஆட்டிகொண்டே இருப்பதை வைத்தும் பருவத்துக்கு வந்ததைத் தெரிந்து கொள்ளலாம். அந்த நேரத்தில் இனப்பெருக்க உறுப்பில் வழவழப்பான திரவமும் வெளிப்படும். பருவ அறிகுறி தெரிந்த 12 மணி நேரத்தில் கிடாவைச் சேர்த்துவிட வேண்டும். பொலி கிடாவுக்கு இரண்டு வயது இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு வருடத்துக்கு ஒரு முறை கிடாக்களை மாற்றிவிட வேண்டும். பருவத்துக்கு வரத் தாமதமாகும் பட்சத்தில், கிடாக்களை அருகில் கட்டி வைத்தால், பெட்டை ஆடுகள் விரைவில் பருவத்துக்கு வந்துவிடும்.
குட்டி ஈன்ற ஆடுகளையும் இதுபோல அடுத்த மூன்று மாதங்களிலேயே பருவத்துக்கு வர வைத்து விடலாம். ஆடுகளின் சினைக் காலம் 8 மாதங்கள். ஓர் ஆடு, இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை குட்டி ஈனும். போயர் கிடாவுக்கும் தலைச்சேரி பெட்டைக்கும் பிறக்கும் கலப்பினக் குட்டிகள், ஆரம்பத்தில் இரண்டரை கிலோ முதல் மூன்றரை கிலோ வரை எடை இருக்கும். 3 மாதங்களில் 10 கிலோ முதல் 12 கிலோ வரை வந்துவிடும். 6 மாதங்களில் 25 கிலோ வரையும் ஒரு வருடத்தில் 45 கிலோ வரையும் எடை வந்து விடும்.
20 நாட்கள் வரை மட்டும்தான் தாயுடன்!
குட்டிகள் பிறந்து 20 நாட்கள் வரை தாயுடனே இருக்க விடலாம். அதற்கு மேல் குட்டிகளைத் தனியாகப் பிரித்து தீவனங்களைச் சாப்பிடப் பழக்க வேண்டும். பால் குடிக்கும் நேரத்துக்கு மட்டும் தாயுடன் சேர்க்க வேண்டும். மூன்று மாத வயது வந்தவுடன் பெட்டைகளையும் கிடாக்களையும் தனித்தனியாகப் பிரித்து வளர்க்க வேண்டும். அதேபோல வயது வாரியாகவும், இளம் சினையாடுகள், முற்றிய சினையாடுகள், குட்டி ஈன்ற ஆடுகள் எனவும் தனித்தனியாகப் பிரித்து வைக்க வேண்டும்.
வயதுக்கேற்ப தீவனம்!
வேலிமசால், முயல்மசால், கிளரிசீடியா, சவுண்டல் போன்ற இலை வகைத் தீவனங்களில் 60 சதவிகிதமும், கோ-4, கோ-3, கோ.எஃப்.எஸ்-29 போன்ற புல் வகை தீவனங்களில் 40 சதவிகிதமும் இருக்குமாறு கலந்து நறுக்கி ஆடுகளுக்கு பசுந்தீவனமாகக் கொடுக்க வேண்டும். 20 நாள் வயதான குட்டிக்கு, ஒரு நாளைக்கு அரை கிலோ அளவில் பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். 3 மாத வயதுடைய குட்டிகளுக்கு ஒரு நாளைக்கு 3 கிலோ வரை பசுந்தீவனமும், 100 கிராம் அடர் தீவனமும் கொடுக்க வேண்டும்.
3 மாதத்துக்கு மேல் வயதுள்ள குட்டிகளுக்கு ஒரு நாளைக்கு 5 கிலோ பசுந்தீவனமும் அரை கிலோ அடர் தீவனமும் கொடுக்க வேண்டும். நன்கு வளர்ந்த ஆடுகளுக்கு
5 கிலோ பசுந்தீவனம் மற்றும் அரை கிலோ அடர் தீவனத்தோடு... தினமும் ஒரு கிலோ அளவுக்கு கடலைக்கொடி, சோளத்தட்டை போன்ற உலர் தீவனத்தையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் ஆடுகள் மற்றும் பொலி கிடாக்களுக்கு அடர் தீவன அளவைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம்!
வெக்கை மற்றும் துள்ளுமாரி ஆகிய நோய்கள் வராமல் தடுக்க, ஆண்டுக்கு ஒரு முறையும், கோமாரி மற்றும் ஜன்னி ஆகிய நோய்கள் வராமல் தடுக்க ஆண்டுக்கு இரண்டு முறையும் தடுப்பூசி போட வேண்டும். மூன்று மாத வயது வரை குட்டிகளுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். அதன் பிறகு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்''
வளர்ப்பு முறைகளைப் பற்றிச் சொன்ன வெங்கடேசன், நிறைவாக வருமானம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
''இதுவரைக்கும் கொட்டில், தாய் ஆடுகள்னு மொத்தம் 25 லட்ச ரூபாய் முதல் போட்டிருக்கேன். நல்ல முறையில பண்ணையைப் பராமரிச்சா... இந்தப் பணத்தை ரெண்டு வருஷத்துல எடுத்துட முடியும். ஒரு ஈத்துக்கு ரெண்டுல இருந்து மூணு குட்டிங்க வரைக்கும் கிடைக்கும். எப்படியும் ரெண்டு குட்டிக்குக் குறையாது. எங்கிட்ட இருக்குற தலைச்சேரி, கலப்பினம், போயர் எல்லாம் சேர்த்து 150 தாய் ஆடுகள் மூலமா... ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை, சராசரியா 900 குட்டிங்க கிடைக்குது. வருஷத்துக்கு சராசரியா 450 குட்டிங்கனு வெச்சுக்கலாம்.
குட்டிகள ஆறு மாசம் வரைக்கும் வளர்த்து, உயிர் எடைக்கு கிலோ 250 ரூபாய்னு விக்கிறேன். ஆறு மாசத்துல ஒரு ஆடு 25 கிலோ வரை எடை வந்துடும். போயர் கலப்பைப் பொருத்து கூடுதல் விலைக்கு வித்துடுவேன். சராசரியா ஒரு ஆட்டுக்கு 5,000 ரூபாய்னு வெச்சிக்கிட்டாலே வருஷத்துக்கு 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடுது.
பராமரிப்பு, அடர் தீவனம், சம்பளம்னு எல்லா செலவும் போக வருஷத்துக்கு 16 லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. ரெண்டு வருஷத்துல முதலீடு கைக்கு வர்றதோட... லாபமும் வர ஆரம்பிச்சுடும்.
சுத்தமான போயர் ஆடுகளுக்கு அதிக விலை கிடைக்கும். அதைக் கணக்குல சேர்க்கல. ஆடு வளர்ப்புல இறங்கினா... முதலீட்டுக்கேத்த அளவுக்குக் கண்டிப்பா வருமானத்தைப் பாத்துட முடியும்'' என்றார் உற்சாகமாக.

அடர் தீவனம் !

கடலைப் பிண்ணாக்கு- 17 கிலோ, தவிடு- 30 கிலோ, கம்பு அல்லது சோளம் போன்ற மாவுச்சத்து மிக்க தானியங்கள் எதுவாக இருந்தாலும்- 50 கிலோ, தாது உப்பு- 2 கிலோ, கல் உப்பு- 1 கிலோ... இவற்றை ஒன்றாக அரைத்தால், 100 கிலோ அடர் தீவனம் கிடைத்து விடும்.
20 நாள் முதல் 3 மாத வயது வரையிலான குட்டிகளுக்கு, 50 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 50 கிலோ தானியங்களை மட்டும் அரைத்து தேவைக்கு ஏற்ப தீவனமாக  கொடுத்தால் போதுமானது.

தொடர்புக்கு
வெங்கடேசன், அலைபேசி: 89034-71006,

கேன் வாட்டர்...


சூப்பர் தொழில் ஏதாவது சொல்லுங்கள் என்று யாரிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் பட்டியலில் நிச்சயம் கேன் வாட்டர் பிஸினஸும் இருக்கும். அந்த அளவுக்கு நல்ல வாய்ப்புள்ள ஒரு தொழிலாக இது மாறியிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், ஒன்று கிடைக்கும் குடிதண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கும் அளவுக்கு யாருக்கும் நேரமிருப்பதில்லை; அல்லது குடிதண்ணீரே கிடைப்பதில்லை... இப்படிப்பட்ட சூழ்நிலையில் கைகொடுப்பது 'கேன் வாட்டர்’ என்று அழைக்கப்படும் சுத்திகரிக்கப்பட்டு கேன்களில் வழங்கப்படும் குடிதண்ணீர்தான்.
  சந்தை வாய்ப்பு!
நகர்ப்புறங்களில் கேன் வாட்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் இதைத்தான் பயன்படுத்து கிறார்கள். பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், பொது நிகழ்ச்சிகள், திருமணங்கள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள் போன்ற வற்றிலும் கேன் வாட்டர்தான் பயன்படுத்தப் படுகிறது. இதனால் அதிகமான சந்தை வாய்ப்பு உருவாகியுள்ளது.
 முதலீடு!
இந்தத் தொழிலைத் தொடங்க குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாய் தேவை. பத்து லட்சம் முதல் முப்பது லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டிலும் இந்த தொழிலை தொடங்கி நடத்தலாம்.
 மூலப் பொருட்கள்!
தண்ணீர்தான் முக்கிய மூலப் பொருள். தண்ணீரை சுத்தம் செய்ய சில வகையான கெமிக்கல்கள் தேவை.
 தயாரிப்பு!
கேன் வாட்டர் தயாரிப்பில் மொத்தம் ஏழு நிலைகள் உண்டு. முதல் நிலை, தண்ணீர் சேகரிக்கும் தொட்டியில், அதாவது 'சம்ப்’பில் (Sump) தண்ணீரை நிரப்புவது. சம்பில் தண்ணீரை நிரப்பிய பிறகு சாண்ட் ஃபில்டர் (Sand Filter) என்ற இயந்திரத்திற்கு அனுப்புவது இரண்டாம் நிலை. இந்த இயந்திரம் கூழாங்கல், குறுமண் ஆகியவற்றால் நிரப்பப் பட்டிருக்கும். இங்குதான் தண்ணீர் சுத்திகரிப்பு நடக்கும். தண்ணீரில் உள்ள தூசி, அழுக்கு போன்றவற்றை இந்த இயந்திரம் நீக்கிவிடும்.
மூன்றாவது நிலையில், ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர் (Activated Carbon Filter) என்ற இயந்திரத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும். இந்த இயந்திரம் நிலக்கரியால் நிரப்பப்பட்டிருக்கும். இங்கு அழுத்தம் கொடுப்பதனால் தண்ணீரில் உள்ள தூசி மற்றும் அழுக்குகள் நீக்கப்படும். இதனால் தண்ணீரின் கடினத்தன்மையும் குறையும்.
நான்காம் நிலையில், மைக்ரான் ஃபில்டர் பிராஸஸ் (Micron Filter)  என்னும் முறையின் மூலம் தண்ணீரில் இருக்கும் நுண்கிருமிகள் நீக்கப்படும். அடுத்து ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் இயந்திரத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும். இங்கு அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம் தண்ணீரில் உள்ள அளவுக்கதிகமான உப்பு, கால்சியம், இரும்பு போன்றவை தனியாகப் பிரிக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தின் குழாய் இரண்டாகப் பிரிக்கப் பட்டுள்ளது. ஒரு குழாயில் நல்ல தண்ணீரும், மற்ற குழாயில் தேவையற்ற தண்ணீரும் வெளியே வந்துவிடும். நல்ல தண்ணீர் 'ஸ்டோரேஜ்’ டேங்குக்கு அனுப்பப்படும். இது ஐந்தாவது நிலை.
இந்த டேங்கில் உள்ள தண்ணீர் 'ஒஸநேட்டர்’ என்ற இயந்திரம் மூலம் ஸ்டெர்லைஸ் செய்யப்படுவது ஆறாம் நிலை. அடுத்து அல்ட்ராவயலெட் பல்ப் (UV Bulb) என்ற இயந்திரத்திற்கு அனுப்பப்படுகிறது. புற ஊதாக் கதிர்களால் தண்ணீரில் உள்ள வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் அழிக்கப்படும். இதுதான் ஏழாவது நிலை.
இதன்பின் இறுதியாக, சுத்தமான தண்ணீர் 'ஃபில்லிங்’ இயந்திரத்திற்கு அனுப்பப்பட்டு கேன்களில் அடைக்கப் படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பாட்டில் அல்லது கேன்களில் நிரப்ப ஒரு பகுதி தனியாக இருக்க வேண்டும். அந்த அறை கண்டிப்பாக ஏசி வசதி கொண்டதாக இருக்க வேண்டும். இப்படி தயாராகும் தண்ணீரை நேராக மார்க்கெட்டிங் செய்ய கொண்டு சென்றுவிடலாம்.
 கட்டடம்!
இத்தொழில் செய்ய குறைந்தபட்சம் 2,000 சதுர அடி இடம் கொண்ட கட்டடம் தேவைப்படும். கட்டடத்தில் பலவிதமான பணிகள் செய்ய தனித்தனியே அறைகள் அமைக்கப்பட வேண்டும். தண்ணீர் நிரப்ப ஒரு அறையும், அதன் சுத்தத்தன்மையை ஆராய ஒரு பரிசோதனைக் கூடமும், ஆரோ பிளான்டில் சுத்தம் செய்ய ஒரு அறையும் தேவைப்படும்.
 மின்சாரம்!
21-30 ஹெச்.பி. மின்சாரம் வரை தேவைப்படுகிறது.
 இயந்திரங்கள்!  
மண்ணை சுத்தப்படுத்தும் இயந்திரம் - சாண்ட் ஃபில்டர், ஆக்டிக் கார்பன் ஃபில்டர், மைக்ரான் ஃபில்டர், ஆர்.ஓ.யூனிட், தண்ணீர் சேகரித்து வைக்கும் டேங்க், ஒஸநேட்டர்,  புறஊதாக் கதிர்கள் சிஸ்டம் ஆகியவை தேவைப்படும். இந்த இயந்திரங்கள் அனைத்துமே ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். தண்ணீரின் சுத்தத்தை ஆய்வு செய்ய ஆய்வகத்தில் இன்குபேட்டர், வாட்டர் பாத், மைக்ரோஸ் கோப் போன்றவைகள் தேவைப்படும்.          
                           
 வேலையாட்கள்!
இத்தொழிலுக்கு குறைந்த பட்சம் எட்டு பேர் முதல் பதினெட்டு பேர் வரை தேவை. மேலும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஆய்வு செய்ய மைக்ரோ லேப்-பில் பி.எஸ்.சி. மைக்ரோபயாலஜி படித்த ஒருவரும், கெமிக்கல் லேப்-பில் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி படித்த ஒருவரும் தேவை.
 பிளஸ்!
மற்ற தொழிலில் மூலப் பொருளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், தண்ணீர் ஏறக்குறைய எந்த செலவும் இல்லாமல் கிடைத்துக் கொண்டே இருப்பது இந்தத் தொழிலில் உள்ள மிகப் பெரிய பிளஸ். 
 மைனஸ்!
12,000 லிட்டர் தண்ணீரை சுத்திகரித்தால் 6,000 லிட்டர் மட்டுமே இறுதியில் சுத்தமாக்கி பயன்படுத்த முடியும் என்பதால் செலவு அதிகமாக இருக்கும். போட்டியாளர்கள் அதிகமானவர்கள் இதில் இருப்பது இன்னொரு பெரிய மைனஸ்.
 லேப் பணிகள்!
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் டி.டி.எஸ். டெஸ்ட்டும், ஓடர் டெஸ்ட்டும் (ODOUR TEST) செய்யப்படும். மேலும், கெமிக்கல் ஆய்வகத்தில் பி.ஹெச். லெவல் டெஸ்ட் செய்வது அவசியம்.
 கட்டுப்பாடுகள்!
சட்டப்படி இங்கு வேலை செய்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. தண்ணீரை நிரப்பும் பகுதியில் வேலை செய்யும் பெண்கள் கண்டிப்பாக பூ, பொட்டு, வளையல் போன்றவை அணியக்கூடாது. கண்டிப்பாக அவர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் தேவை. தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கையில் உறை, வாயில் முகமூடியும் (விகிஷிரி) அணிந்து கொள்ள வேண்டும். இருபது லிட்டர் கேன்களை மறுபடி உபயோகப்படுத்தும் போது சோப் ஆயில், குளோரின், சுடு தண்ணீர் போன்றவற்றால் கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.
* ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற வருடம் 97,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
* தண்ணீர் நிரப்பப்பட்ட 20 லிட்டர் கேன் ஒன்றின் விலை 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு கேனுக்கு 3 முதல் 5 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.
* தண்ணீர் பேக் (றிகிசிரி) செய்யும் அளவுகள்: 300 மில்லி, 500 மில்லி, 1 ,2, 5, 20 லிட்டர்.
* மழை நீரை நேரடியாக சுத்திகரிக்கக் கூடாது.
இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட்டு வரும் தொழில். அதிகரித்து வரும் சந்தையும் சாதகமாக இருப்பதால் துணிந்து இத்தொழிலில் இறங்கலாம்.

கரெக்ட் ரேட்டில் கட்டலாம் வீடு!


டுத்தர மக்களின் வாழ்நாள் கனவு சொந்தமாக ஒரு வீடு கட்டுவது. இந்த கனவை நனவாக்குவதில் சிக்கலாக இருப்பது இரண்டு விஷயங்கள்தான். சிக்கல் நம்பர் ஒன், எகிறிக் கிடக்கும் ரியல் எஸ்டேட் விலை. குறைந்தபட்சம் ஆறேழு வருடங்களுக்கு முன்பு நிலம் வாங்கியிருந்தீர்கள் என்றால் நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்தான். நீங்கள் வாங்கிய நிலத்தின் மதிப்பு இன்றைக்கு பல மடங்கு பெருகி இருப்பதைப் பார்த்து நீங்களே உங்களை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், அன்றைக்கு வாங்கத் தவறியவர்கள் இன்று வாங்க நினைத்தால் அதைவிட பல மடங்கு பணம் கையில் இருக்க வேண்டும்.
 சிக்கல் நம்பர் டூ, மணல், ஜல்லி, சிமென்ட் போன்ற கட்டடம் கட்டத் தேவையான பொருட்களின் விலை வானத்துக்கும் பூமிக்கும் தாவிக் கொண்டிருப்பது. மணல் விலை ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. சென்னையில் இருக்கும் விலை வேறு; நெல்லையில் இருக்கும் விலை வேறு. செங்கல்லின் கதையும் அதேதான். இவை தவிர, கட்டடம் கட்டுபவர்களுக்கான கூலியும் பாரதூரமாக மாறுகிறது.
இப்படி சந்துக்குச் சந்து கட்டடம் கட்டுவது தொடர்பான அத்தனை விஷயங்களும் வெவ்வேறாக இருக்க, புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் ஏகத்துக்கும் குழம்பித்தான் போவார்கள்.
''என் பக்கத்து வீட்டுக்காரர் கட்டுற அதே அளவுக்குத்தான் நானும் வீடு கட்டுறேன். ஆனா, என்னைவிட கம்மியாத்தான் அவரு செலவு பண்றாரு. நான்தான் ஏமாந்துட்டேன்'' என்று புலம்புவர்கள் ஒருபக்கம்...
''எட்டு லட்ச ரூபாய்க்குள்ள வீடு கட்டி முடிச்சுடலாம்னு நெனைச்சு ஆரம்பிச்சேன்... இன்னைக்கு பன்னிரண்டு லட்சத்தைத் தாண்டிடுச்சு'' என்று புலம்புவர்கள் இன்னொரு பக்கம்... ஆக மொத்தத்தில், இன்றைக்கு கரெக்ட்-ஆன செலவில் வீடு கட்டுவது எப்படி என்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது. உள்ளபடி ஆயிரம் சதுர அடி வீடு கட்ட எவ்வளவு பணம் செலவாகும்? கான்ட்ராக்ட் முறையில் வீடு கட்டப் போவதாக இருந்தால் எவ்வளவு தரலாம்? ஃபிளாட்-ஆக இருக்கும் பட்சத்தில் எவ்வளவு விலை கொடுத்து வாங்கலாம்? என்பதை யாராவது எடுத்துச் சொன்னால் கோடி புண்ணியமாகப் போகும் என்கிறீர்களா?
இதோ உங்களுக்காகவே சரியான செலவில் வீடு கட்ட சூப்பர் மாடல் பட்ஜெட்... ஒவ்வொரு இடத்தைப் பொறுத்து ஒவ்வொரு விலை இருந்தாலும் இந்த பட்ஜெட்டை வைத்துக்கொண்டு ஓரளவு சரியான விலைதான் நாம் கொடுக்கிறோமா என்பதை செக் செய்து கொள்ளலாம்...
வீடோ, ஃபிளாட்டோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், பில்டர் அல்லது புரமோட்டர்கள் பல்வேறு டெக்னிக்கல் வார்த்தைகளைச் சொல்லி நம்மை குழப்ப வாய்ப்பிருப்பதால், முதலில் சில விஷயங்கள் பற்றி நமக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்வோம்.
கார்பெட் ஏரியா
நான்கு சுவர்களுக்கு இடைப்பட்ட அளவு. அதாவது, வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக்குள் கார்பெட் விரித்தால் எவ்வளவு இடத்தை அடைத்துக் கொள்ளுமோ அந்த அளவுதான் கார்பெட் ஏரியா.
பிளின்த் ஏரியா
கார்பெட் ஏரியாவுடன் சுவர்களின் தடிமன் சேர்ந்தது.
சூப்பர் பில்ட் அப் ஏரியா
பிளின்த் ஏரியா அளவில் 15% முதல் 20% அதிகரிப்பது சூப்பர் பில்ட் அப் ஏரியா. இந்த பரப்புக்குதான் விலை சொல்வார்கள். பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதை, மாடிப் படிக்கட்டு, லிஃப்ட் அறை, மோட்டார் அறை, உடற்பயிற்சி கூடம் போன்றவற்றின் அளவுகள் பிளின்த் ஏரியாவுடன் சேர்க்கப்பட்டு, சூப்பர் பில்ட்அப் ஏரியா கணக்கிடப்படும்.
யூ.டி.எஸ்.
அடுக்குமாடிக் குடியிருப்பின் சதுர அடி விகிதாசாரத்துக்கு ஏற்ப, அந்த மனையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதுர அடி மனை சொந்தம் என்பதை குறிப்பது. 'பிரிக்கப்படாத மனைப் பரப்பு’ (Undivided Share) என்று கிரய பத்திரத்தில் இது குறிப்பிடப்பட்டிருக்கும். (யூ.டி.எஸ். எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை பெட்டிச் செய்தியில் பார்க்க!)
மேற்சொன்ன இந்த நான்கு விஷயங்களையும் நீங்கள் புரிந்து கொண்டுவிட்டால், உங்களுக்குத் தேவையான அல்லது உங்களுக்கு கிடைக்கப் போகும் கட்டடத்தின் அளவு தெரிந்துவிடும். இனி, இந்த கட்டடம் கட்ட என்னென்ன பொருட்கள் தேவைப்படும்? அதன் விலை என்ன? என்பதைப் பார்ப்போம்...
என்ன செலவாகும்?
ஆயிரம் சதுர அடி பிளின்த் ஏரியா கட்டடம் கட்ட சுமார் 15 லட்ச ரூபாய் செலவாகும். (ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு செலவாகும் என்பது மேலே தனியாகக்  கொடுக்கப் பட்டுள்ளது.)
சொல்லப்பட்ட கணக்கி லிருந்து விலைவாசி உயர்வைப் பொறுத்து மணல், செங்கல், சிமென்ட், கம்பி மற்றும் இதர பொருட்களின் விலை 2% முதல் 3% வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்த கணக்குபடி ஒரு சதுர அடி கட்ட சுமார் 1,500 ரூபாய் ஆகிறது. இது பில்டர்கள் கட்டுவதற்கான செலவு. நீங்களே முன்நின்று கட்டும்போது 1,400 ரூபாயிலிருந்து 1,350 ரூபாய் வரை குறைய வாய்ப்பிருக்கிறது. முதல் தரமான பொருட்களை வாங்குவதாக நினைத்தே இந்த கணக்கு போடப்பட்டுள்ளது. சென்னையைவிட மதுரை, சேலம், திருநெல்வேலியில் மணல், செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை குறைவு என்பதால், செலவு இன்னும்கூட குறைய வாய்ப்பிருக்கிறது.
நாம் வாங்கும் ஒரு பிளாட்டின் விலை ஓரளவு நியாயமானதாக இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது என்ற விஷயத்துக்கு இப்போது வருவோம்... உதாரணமாக நீங்கள் சென்னை தாம்பரத்திற்கு அருகில் ஒரு ஃபிளாட்டை வாங்குவதாக முடிவு செய்கிறீர்கள். அந்த ஃபிளாட்டின் விலை ஒரு சதுர அடி சுமார் 3,000 ரூபாய் என்று பில்டர் சொல்கிறார்... நீங்கள் வாங்கப்போகிற ஃபிளாட்டின் சூப்பர் பில்ட் அப் ஏரியா 952 ச.அடி. என்றும் உங்களுடைய யூ.டி.எஸ். 555 ச.அடி. என்றும் அவர் சொல்கிறார்.
ஆனால், நம் கணக்குப்படி எவ்வளவு செலவு ஆகும் ஃபிளாட்டின் விலை எவ்வளவு வரும் என்று பார்க்கலாம்...
அங்கு மனை விலை ஒரு சதுர அடி 1,400 ரூபாய் என்று விசாரித்தபோது நமக்குத் தெரிய வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்... அடுத்து கட்டுமானச் செலவு எவ்வளவு ஆகும் என்று பார்க்கலாம்... நாம் முன்பு கணக்கிட்டபடி ஒரு சதுர அடி 1,400 ரூபாய் எனும்பட்சத்தில் 952 ச.அடிக்கான கட்டுமானச் செலவு 13,32,800 ரூபாய் வரும். அதேபோல் 555 சதுர அடி மனைக்கான விலை (சதுர அடி விலை 1,400 ரூபாய்) 7,77,000 ரூபாய் ஆகும். ஆக, மொத்தம் 21,09,800 ரூபாய் ஆகும்.
இந்த கணக்கின்படி பார்த்தால் ஒரு ச.அடிக்கான விலை சுமார் 2,220 ரூபாய் வருகிறது. இதற்கு மேல் பில்டர் சொல்லும் விலை அவரது லாபமாகும். ஒருவேளை அவர் 20% லாபம் வைத்தால் சதுர அடி 2,660 ரூபாய் என்று வைத்து விற்பார். ஒருவேளை அவர் பத்திரிகை மற்றும் டி.வி-களுக்கு விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்து, மேலும் புராஜெக்ட்டுக்கு கடனும் வாங்கி இருந்தால், கடனுக்கான வட்டி என எல்லாவற்றையும் சேர்ப்பார். அந்த வகையில் அவர் சுமார் 2,900-3,000 ரூபாய் வரை சொல்ல வாய்ப்பிருக்கிறது. 
கவனிக்க வேண்டியவை..!
கட்டிய வீட்டை வாங்கும்போது!
* தனி வீடுகளைப் பொறுத்தவரையில் பிளின்த் ஏரியா 1,000 சதுர அடி என்றால் கார்பெட் ஏரியா 750-800 சதுர அடி வரை இருக்கும். ஃபிளாட் என்று வரும்போது, 600-650 சதுர அடிதான் இருக்கும். பொது இடங்கள், பார்க்கிங் என பொதுவான வசதிகள் அதிகமாக அதிகமாக, கார்பெட் ஏரியா என்பது குறைந்து கொண்டே வரும்.
* எப்போது ஃபிளாட் வாங்கினாலும் கார்பெட் ஏரியாவை அளந்து உறுதி செய்யுங்கள். கட்டி முடித்த ஃபிளாட் என்றால் சுவர்களுக்கு இடையிலான தரையின் அளவை துல்லியமாகக் கணக்கிடுங்கள். பில்டர் சொல்லும் பிளின்த் ஏரியாவிலிருந்து சூப்பர் பில்ட் அப்  ஏரியா 15 முதல் 20 சதவிகிதம் அதிகமாக இருந்தால் அந்த பில்டர் நியாயமானவர். அதற்கு மேல் இருந்தால் எதற்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கேளுங்கள்.
ஏனென்றால், நீங்கள் விற்கும்போது இந்தப் பிரச்னை எழும். மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள், நீச்சல் குளம், தோட்டம், வாக்கிங் செல்லும் நடைபாதை போன்றவை விடப்பட்டிருக்கும் புராஜெக்ட்களில் பிளின்த் ஏரியா, சூப்பர் பில்ட் அப் ஏரியா 30-35 சதவிகிதமாக இருக்கும் என்பது வேறு விஷயம்.
* அடுக்குமாடி குடியிருப்பு களில்தான் விதிமுறை மீறல்கள் அதிகம் நடைபெறுகிறது. அதனால் அப்ரூவல் பிளான்படி விதிமுறைகள் மீறாமல் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்ப்பது அவசியம். வீட்டுக் கடன் வாங்காத பட்சத்தில் முறைப்படி அப்ரூவல் வாங்காமல் கட்டப்பட்ட வீடுகளை குறைந்த விலைக்கு தள்ளிவிடுவது நடக்கிறது. இதுபோன்ற வீடுகளை வாங்கினால் பிற்காலத்தில் பிரச்னை வர வாய்ப்பு இருக்கிறது. அவசரத்துக்கு வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்க முடியாது. 
* காமன் ஏரியா அனைவரும் பயன்படுத்தும்படி இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். சில பில்டர்கள்/புரமோட்டர்கள், காமன் ஏரியா என்று ஒரு பகுதியைக் காட்டி விட்டு, அதில் அறை அல்லது கடை கட்டி விற்று விடுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது.
* சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, கார் நிறுத்தும் இடம் சூப்பர் பில்ட் அப் ஏரியாவில் சேர்க்கப்பட்டிருக்கும் பட்சத்தில் கார் நிறுத்தும் இடத்துக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை. திறந்தவெளி கார் நிறுத்தும் வசதி என்கிறபோது நயா பைசா கூட கொடுக்கத் தேவையில்லை.
* தனி வீடு என்கிறபோது அஸ்திவாரம் எத்தனை அடி என்பதை கவனியுங்கள். குறைந்தது நான்கு அடி போடுவது கட்டடத்துக்கு நல்லது. சில பில்டர்கள் இரண்டு அடிதான் தோண்டுவார்கள் என்பதால் உஷாராக இருப்பது நல்லது. இதேபோல், வீட்டில் அறையின் உயரம் குறைந்தது 10 அடி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சில பில்டர்கள் ச.அடி விலையைக் குறைத்துச் சொல்லிவிட்டு, வீட்டின் உயரத்தை 9.5 அடி அல்லது 9 அடியாக குறைக்கவும் வாய்ப்புண்டு! 
* வீட்டைச் சுற்றி குறைந்தது 5 அடி விட்டிருக்கிறார்களா என்பதைக் கவனியுங்கள். பல பில்டர்கள் 2 அடிதான் விடுகிறார்கள். இது பிற்காலத்தில் பிரச்னை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. 
சொந்தமாக வீடு கட்டும்போது..!
* செப்டிக் டேங், மாடிப் படி, தண்ணீர் தொட்டி, போர்ட்டிகோ, சுற்றுச்சுவர் கணக்கை எல்லாம் மொத்த சதுர அடி கணக்கில் சேர்க்க விடாதீர்கள். உதாரணத்துக்கு சுற்றுச் சுவர் கட்ட ஒரு சதுர அடிக்கு 200 ரூபாய்தான். அந்த வகையில் மேற்கண்ட செலவுகளை தனியாக கணக்கிட்டால் மொத்த செலவு குறைய வாய்ப்பு இருக்கிறது.
* கீழ்தளத்தை விட மேல்தளம் கட்டும்போது செலவு 10-15% குறையும். கணக்குபடி இன்னும் அதிகமாககூட குறைய வேண்டும். ஆனால், பொருட்களை மேல் தளத்துக்கு எடுத்துச் செல்ல கூடுதல் கூலி கொடுக்க வேண்டியிருக்கும். 

ஒரு மாற்றுமத சகோதரன் இஸ்லாத்தை பற்றி … !! ??. ஏன்? ஏன்?


மதமாற்றமல்ல! இது மனமாற்றம். இங்கே இருக்குது சமத்துவம்…!
20, 21ஆம் நூற்றாண்டில்தான் பலவிதமான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உலகுக்குக் கிடைத்தன. இதன் வாயிலாக மின்சாரம் முதல் கம்ப்யூட்டர் வரை கண்டுபிடிக்கப்பட்டு இன்று நமக்கு அது தவிர்க்க இயலாததாகிவிட்டது.
தொலைதொடர்பு, போக்குவரத்து போன்றவற்றின் மூலம் இன்று உலகம் விரல் நுனியில் சுருங்கிவிட்டது. எந்தத் தொலைவிலுள்ள மனிதனும் உலகின் மற்றொரு மூலையிலுள்ள மனிதனை தொடர்புகொண்டு மருத்துவம், வியாபாரம், கல்வி உட்பட அனைத்துத் துறைகளிலும் பயனடைய முடிகிறது.
அதேநேரத்தில், இன்றுவரை நமது இந்தியத் திருநாட்டில் பல கிராமங்களிலும் ஒரு சாரார் மட்டும் ஏனோ மற்றவர்களிடமிருந்து தனித்து விடப் பட்டுள்ளனர். அவர்கள்தான் சில மதத்தினரால் தாழ்ந்த ஜாதியினர் என்று அழைக்கப்படும் தலித்துகள்.
தலித்துகள் இந்தியாவையே ஆளத் தகுதிபெறும் அளவுக்கு பெரும்பான்மையினர். ஆனால் அவர்களின் நிலையோ மிகவும் பரிதாபத்திற்குரியது.
எப்படியெனில், இன்று அவர்கள் சில இடங்களில் வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளை விட கீழ்த்தரமாக
நடத்தப்படுகின்றார்கள்.
மேல்சாதியினர் வசிக்கும் இடங்கள் வழியாக தலித்கள் செல்லும்போது செருப்பைக் கையில் தூக்கிக்கொண்டுதான் செல்லவேண்டும். சில இடங்களில் செல்லவே முடியாது.
தாழ்த்தப்பட்ட ஒருவன் இறந்துவிட்டால் அவனது பிணத்தை எரிக்கவோ அல்லது புதைக்கவோ இந்த மேல்சாதி மக்கள் வசிக்கும் பகுதிகள் வழியாக கொண்டுசெல்லவே முடியாது. பல மைல் தூரங்கள் தேவையில்லாமல் சுற்றிச் சென்றுதான் கொண்டு செல்லவேண்டும்.
ஐந்தறிவு கொண்ட நாய் ஒன்று மேல்சாதிக் காரனின் வீட்டில் நுழையலாம்… அங்குள்ள பாத்திரத்தில் வாய் வைக்கலாம்… அவர்களின் தெரு வழியாக இஷ்டத்துக்கு வலம் வரலாம்… ஆனால், இதே காரியங்களை இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒருவன் செய்தால் இவர்களின் வீடும், பாத்திரமும் உடலும் தீட்டுப்பட்டுவிடும்…! அந்தோ பரிதாபம்…!!!
மேல்சாதியினர் என்று கூறிக்கொள்வோரின் வீட்டுப் பெண்ணையோ அல்லது ஆணையோ இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒரு ஆணோ, பெண்ணோ நேசித்துவிட்டாலே போதும்…
அவர்களுக்கு மொட்டை அடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, சக மனிதர்கள் முன் கேவலப்படுத்தப்படுவார்கள். ஏன்…?
அவர்களுடைய உயிர் கூட பறிக்கப்பட்டுவிடும். இது நமது இந்தியாவில் இன்றும் சர்வ சாதாரணமாக
 நடந்து வருபவை.
அது மட்டுமல்ல! தாழ்த்தப்பட்ட பெண் ஒருத்தி மேல்சாதிக்காரனால் மானபங்கப் படுத்தப்பட்டாலோ, கொல்லப்பட்டாலோ அதற்கு சாட்சியே இல்லாமல் ஆக்கி, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடுகின்றனர்.
பரிதாபம்… பரிதாபம்…
இந்திய அரசியல் சாசனச் சட்டத்தைத் தொகுத்துத்தந்த பெருமை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் தலைவர் டாக்டர் அம்பேத்கரைச் சாரும். ஆனால் அவரது சமுதாயமோ திக்குத் தெரியாத காட்டில் உள்ளது. இதற்கெல்லாம் காரணம்… இந்த மக்கள் அண்ணல் அம்பேத்கர் மீது உயிரையே வைத்திருந்தபோதிலும் அவர் காட்டிய பாதையில் அடியெடுத்துச் செல்லாததுதான்!
கல்வி கற்பி! ஒன்று சேர்!! புரட்சி செய்!!! என்றார் அண்ணல் அம்பேத்கர். ஆனால் இந்த மக்கள் மற்றவர்களைப் போல கல்வி கற்க இயலவில்லை. காரணம் பொருளாதாரம். தலைமுறை தலைமுறையாக ஆளும் வர்க்கத்திற்கு கூலி வேலை செய்வதும், கிடைப்பதை வைத்துக்கொண்டு சடங்கு, சம்பிரதாயங்கள் என்று செலவழித்துவிட்டு கடனாளியாகி, மீண்டும் அவர்களிடமே கையேந்திக் கொண்டு நிற்பதும்தான்!
பல்லாண்டு காலங்களாக பல தலைவர்களும் முயற்சி செய்தபோதிலும் இந்தக் கொடுமைகளுக்கு இன்றும் தீர்வு இல்லை.
இது எந்த அளவுக்குச் சென்றுள்ளது என்றால், மனிதனின் மலத்தை மனிதனையே தின்ன வைத்துள்ள அநியாயம்… அக்கிரமம்… இன்று இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு ஏற்பட்டுள்ளது.
அனைவரும் வெட்கித் தலைகுனியவேண்டிய விஷயமல்லவா இது…? மேலவலவு, கொடியங்குளம், வாசாத்தி போன்ற கிராமங்களின் வரிசையில் இன்னும் எத்தனை எத்தனை கிராமங்களோ…!
ஜாதிகள் இல்லையடி பாப்பா…’ இது பிஞ்சுக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்படும் பாட்டு. ஆனால், இதைக் கற்பதற்கு பள்ளியில் சேர வேண்டுமானால் தனது ஜாதியைச் சொல்லித்தான் சேர வேண்டியதிருக்கிறது.
முன்னேறுவதற்கு முயலும் இந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு அதில் கிடைத்த பலன் பூஜ்யமே!
பல தலைவர்கள் வந்தார்கள்… சென்றார்கள்…
அவர்களால் தங்கள் சமுதாயத்திற்காகக் குரல் கொடுக்கவும், சில சலுகைகளைப் பெற்றுத்தரவும் முடிந்ததே தவிர, அம்மக்கள் சக மனிதர்களுடன் சரி சமமாகப் பழகும் உரிமையை, தலைமைத்துவத்தை வாங்கிக் கொடுக்க முடியவில்லை, கொடுக்கவும் முடியாது.
அரசாங்கமும் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவை அனைத்துமே வீணாகியதுதான் மிச்சம்.
ஏனென்றால், இது நாட்டின் கொள்கை அல்ல! அவர்கள் சார்ந்துள்ள மதத்தின் கொள்கை. அன்றாட காரியங்கள் முதல் அவ்வப்போது நடக்கும் மதச் சடங்குகள், நல்ல நிகழ்ச்சிகள் அனைத்திலும் தலித்துகள் ஜாதியின் பெயரால் ஒதுக்கப்பட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், எது எதுவெல்லாம் மனித சமுதாயத்திற்கு தீங்கு தருமோ, பாவமான காரியமோ, அந்த அனைத்திலும் ஜாதி வேறுபாடுகள் எங்கோ பறந்துவிட்டன.
`உதாரணமாக, தியேட்டரில் சினிமா பார்க்கும் ஒரு மேல்சாதிக்காரன் தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவன் என்ன ஜாதி என்று பார்ப்பதில்லை.
மதுக்கடைகளில் மது அருந்துபவர்கள் ஜாதிப் பாகுபாடு இல்லாமல் கிண்ணங்களை மோதவிட்டு மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வதைப் பார்க்கிறோம்.
விபச்சாரம் செய்யும் ஆணும், பெண்ணும் தங்களுக்குள் என்ன ஜாதி என்று கேட்டுக்கொள்வதில்லை.
ஆனால் இதுவே நல்ல காரியங்களில் காணவே முடிவதில்லை. ஆகா… என்னே சமத்துவம்…!!!
இந்த இழிவுகளிலிருந்தெல்லாம் நீங்கி, சமத்துவம் பெறலாம் என்று கிறிஸ்துவ மதத்தில் இணைவோரும் கூட அங்கே தலித் கிறிஸ்துவன் என்ற அடையாளத்துடனேயே வாழவேண்டியுள்ளது.
எல்லாம் சரிதான்! சமத்துவத்துக்கு வேறு என்னதான் வழி என்று நீங்கள் கேட்கிறீர்களா…? திருச்சி பெல் தொழிலாளர் மாநாட்டில் தந்தை பெரியார் உரையாற்றும் போது, எங்கு சென்றாலும் உங்களை இந்த ஜாதிப்பாகுபாடு விடாது!
இந்த இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றுதான் நன்மருந்து என்று அவர் முழங்கினார்.
கொடிக்கால்பாளையத்தில், தாழ்த்தப்பட்டவராக இருந்தவர் கொடிக்கால் செல்லப்பா.
இவர் ஒரு கம்யூனிஸ்ட்வாதியாக இருந்தபோதிலும்,
தான் இருக்கும் மதத்திலிருந்துகொண்டு ஒருபோதும் ஜாதி இழிவை விட்டு அகல இயலாது என்ற நிலையில்
இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் என்ற பெயரில் இன்று தானும் தலை நிமிர்ந்து நடப்பதோடு, தன்னைச் சார்ந்த சக மக்களைப் பார்த்து,
புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! என்று புத்தகம் மூலம் அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறார்.
அரசியல்வாதியாகவும், பிரபல பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியராகவும் இருந்த அடியார் என்பவர், இஸ்லாம் தவிர்த்து வேறு எதுவாலும், எவராலும் தம் சமுதாயத்தை உயர்வடையச் செய்ய முடியாது என்கிற நிலையில்,
நான் காதலிக்கும் இஸ்லாம் என்ற புத்தகத்தை தன் சமுதாயத்திற்குத் தந்த கையோடு தன் வாழ்வையும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அமைத்துக் கொண்டார்.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், இங்குள்ள ஜாதிவெறி போல நிற வெறியும், இனவெறியும் தலைவிரித்தாடும் அமெரிக்காவில் கறுப்பர் வெள்ளையர் என்ற வேற்றுமையால் தாங்க முடியாத பாதிப்பிற்குள்ளான கறுப்பர் இன கிறிஸ்துவராக இருந்த மால்கம் எக்ஸ், குத்துச்சண்டையில் உலக ஹெவிவெய்ட் சாம்பியனாக வலம் வந்தும் நிற இழிவால் தொடர்ந்து பாதிக்கப்பட்ட க்ளேசியஸ் கிளே என்ற முஹம்மத் அலி க்ளேயும் இஸ்லாம் ஒன்றுதான் ஜாதி, இன, நிற, மொழி வேறுபாடற்ற மார்க்கம் என்று உணர்ந்துகொண்டு தங்களை சமத்துவ இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இவையெல்லாம், வேறு மதங்களிரிருந்து சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்களின் நிலை. சரி, இந்த ஜாதி, இன, நிற, மொழி வேறுபாடுகளைக் களைய இஸ்லாம் என்னதான் கூறுகிறது என்று அறிய ஆவலா? உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வழிகாட்டியாக உள்ள திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்று பாருங்கள்:

ஓ மனிதர்களே…! உங்கள் இறைவனுக்கு பயந்துகொள்ளுங்கள். அவன் உங்களனைவரையும் ஒரே ஆத்மாவிரிருந்தே படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் (உலகில்) பரவச்செய்தான். ஆகவே இறைவனுக்கு பயந்துகொள்ளுங்கள்….. (திருக்குர்ஆன் 4:1)
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பது பிறப்பினால் ஏற்படுவதல்ல, அவரவர் செய்யும் நல்ல தீய செயல்களைக் கொண்டே ஒருவன் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்று பிரிக்கப்படுவான் என்று உலகப் பொதுமறை திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:
மனிதர்களே…! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிரிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) நிச்சயமாக உங்களில் எவர் (தம் செயல்கள் விஷயத்தில் இறைவனுக்கு) மிகவும் பயபக்தி உடையவரோ அவரே அல்லாஹ்விடம் உங்களில் மிகவும் கண்ணியமானவர். (திருக்குர்ஆன் 49:13)
அது மட்டுமல்ல! ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் செய்யப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் அனைத்தையும் தவிர்த்து, எந்தத் தேவையுமற்ற ஒரே இறைவனை வணங்கி வழிபட இதோ திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்
(இறைவனின் தூதரே…!) நீர் கூறும்…! இறைவன் ஒருவனே…!
இறைவன் (எவரிடத்தும்) எந்தத் தேவையுமற்றவன்…!
அவன் (யாரையும்) பெறவும் இல்லை….!
(எவராலும்) பெறப்படவும் இல்லை…!
அன்றியும் அவனுக்கு நிகராக எவருமில்லை…!!!
(திருக்குர்ஆன் 112:1 4) .
இன்று இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் யாரும் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல!
சில தலைமுறைகளுக்கு முன் இதுபோன்ற ஜாதி இழிவுகளிரிருந்து விடுதலை பெற முடிவு செய்து அதனடிப்படையில் தங்களை மாற்றிக்கொண்டவர்கள் தான்
இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலோர். ஒரு சிறிய அளவு முஸ்லிம்கள், இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள விஞ்ஞான உண்மைகள், அறிவுப்பூர்வமான தத்துவங்கள்… இன்னும் இதுபோன்ற பல காரணங்களால் கவரப்பட்டு சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள்.
அது மட்டுமல்ல!
இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள முக்கிய வழிபாடுகளான தொழுகை, ஹஜ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்… ஒருநாளைக்கு 5 வேளை கூட்டுத் தொழுகை நடத்தப்படுகிறது.
நேற்றுவரை வேறு வேறு ஜாதிகளில் இருந்து கொண்டு ஒருவரையொருவர் சிறிதும் நெருங்காமல் வாழ்ந்துவந்த மக்கள் இன்று முஸ்லிம்களாக ஓரணியில் நின்று தோளோடு தோள் நின்று தொழும் காட்சியை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியவன் சற்று முந்திவந்து, உயர்ஜாதியிலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியவன் தாமதமாக வந்தால், பிந்தி வந்தவன் பின் வரிசையில்தான் நின்றாக வேண்டும்.
முந்தி வந்த சகோதரனின் கால் பிந்தியவனின் தலைமீது படும். நாட்டின் பிரதமராக இருந்தாலும், அவர் பிந்தி வந்தால் பின் வரிசையில்தான் நின்றாக வேண்டும். நான் பிரதமரல்லவா என்று முன் வரிசையில் மற்றவரை ஒதுக்கிவிட்டுச் செல்ல முடியாது.
அதுபோல, வருடந்தோறும் சவூதி அரேபியாவில் புனித மக்கா நகரத்தில் உள்ள இறை ஆலயமான கஃபாவில் ஹஜ் என்ற வணக்கம் நடைபெறுகிறது.
பல நாடுகளைச் சார்ந்த, பல மொழி, இன, நிற வேறுபாடுகளைக் கொண்ட சுமார் 35 லட்சம் பேர் ஒரே உடையில், ஒரே இடத்தில் ஒன்று கூடும் அந்த நாளில் அனைவரும் எந்த வித்தியாசமான குறுகிய எண்ணமும் இன்றி, இரண்டறக் கலந்து வலம் வரும் அந்தக் காட்சியைப் பார்ப்போர், இஸ்லாமிய மார்க்கத்தில் இந்தக் குறுகிய வேறுபாடுகளுக்கு எந்த இடமும் இல்லை என்று சத்தியமிட்டுக் கூறுவர்.
1432 வருடங்களுக்கு முன்பு, இன்று நாம் காணும் இந்த வேறுபாடுகளை விட மோசமான பாகுபாடுகள் நிலவி வந்தன.
இப்போதாவது இந்த தலித் மக்கள் தங்களது சுய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஓரளவாவது வாய்ப்புள்ளது.
ஆனால் அன்றைய அரபு சமுதாயத்தில் கறுப்பு இன மக்கள் அடிமைகளாக தனது முழு வாழ்வையும் இழந்து, மாட்டையும்விட கேவலமாக நடத்தப்பட்ட காலம் அது!
அந்தப் பொழுதில்தான் இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம் (முஹம்மது நபி) அவர்கள் மூலமாக உலகப் பொதுமறை திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டு, அதனடிப்படையில் ஒரு மாபெரும் சமூகப் புரட்சியையே ஏற்படுத்தியது. அந்தப் புரட்சி இரண்டு விதமாக நடத்திக் காட்டப்பட்டது.
ஒன்று : இன்று கம்யூனிஸவாதிகளால் தோழர்களே! என்று அழைக்கப்படும் அந்தப் பதம் 1432 வருடங்களுக்கு முன்பே இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களால் மன உவப்புடன் செயல்படுத்திக் காட்டப்பட்டது.
அடுத்தது : ஒரு காலத்தில் பல புரட்சிகளையும், புதுமைகளையும், தத்துவங்களையும் பேச்சிலும், எழுத்திலும் காட்டி தங்களுக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிய பல தலைவர்களுக்கு இன்று பொன்னாலும், வெள்ளி மற்றும் வெண்கலத்தாலும், பாறையாலும் சிலை வடித்து வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
ஆனால், தான் சொன்னதைச் செய்து காட்டியவர்… செய்ததை மட்டுமே சொன்ன ஒரே தலைவர்… ஒரு அறிவுப்பூர்வமான மார்க்கத்தை உலக மக்களுக்கு விளக்கிக்காட்ட வந்த உத்தமர்… அப்பேற்பட்ட நபிகள் நாயகம் அவர்கள், தான் வரும்போது மக்கள் தனக்காக எழுந்து நிற்பதையே தடுத்து நிறுத்திக் காட்டியவர்… காலில் விழுவதைக் கண்டித்தவர்…
தற்போது மொத்த உலகில் நான்கில் ஒருவரால் பின்பற்றப்படும் நபிகள் நாயகம் அவர்களுக்கு உலகின் எந்த மூலையிலும் ஒரு சிறு சிலை கூட கிடையாது என்பது மாபெரும் புரட்சிதானே…?
(சில வருடங்களுக்கு முன்னர் உலகின் பல உயர்ந்த தலைவர்களை மதிக்கும் நோக்கத்தில் அமெரிக்காவில் நிறுவப்பட்ட சிலைகளின் வரிசையில் நபிகள் நாயகம் அவர்களுக்கும் ஒரு சிலை வைத்தனர்.
பொதுவாகவே, இது சந்தோஷப்பட வேண்டிய ஒன்று.
ஆனால் நபிகள் நாயகம் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த முஸ்லிம் சமுதாயம், நபிகள் நாயகத்துக்கு வைக்கப்பட்ட சிலையை அகற்றச் சொல்லி உலகம் முழுவதும் கொந்தளித்தது.
முடிவில் அந்தச் சிலையும் அகற்றப்பட்டது. இந்தப் புரட்சியை எங்காவது காட்ட முடியுமா?
வெறும் பேச்சளவில் மட்டும் புரட்சி பேசாமல் செயல்படுத்தியும் காட்டினார்கள் நபிகள் நாயகம் அவர்கள்!
அனைத்து மக்களையும் தொழுகைக்கு அழைக்கும் அழைப்போசையை (பாங்கு) முழங்கிட அன்றை அரபு சமுதாயத்திலேயே மகா மட்டமாகக் கருதப்பட்ட கறுப்பர் இன அடிமையான பிலால் என்ற ஒரு தோழரையே நபிகள் நாயகம் அவர்கள் நியமித்தார்கள்.
இதன் காரணமாக, அதுவரை அவரை அடிமையாகப் பார்த்துக்கொண்டிருந்த அரபு மக்கள் அன்று முதல் அவரை தலைவர் என்று அழைக்கத் துவங்கிவிட்டனர்.
இதுதான் இஸ்லாம் செயல்படுத்திக் காட்டும் சமத்துவம்.
எனவே,
உயர்வுக்கு வழிவகுக்கும் சாதி, இன, நிற, மொழி மற்றும் இன்னபிற வேறுபாடுகள், மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின்பால் உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்…!
சமத்துவம் காணுங்கள்…!!வெற்றி பெருங்கள்…!!!
படைத்த இறைவன் நம் அனைவருக்கும் கிருபை செய்வாராக…!