மூட நம்பிக்கை



                                                     
அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}  

இறைவன் கூறுகிறான் !நான் நாடியதை தவிர வேறொன்றும் உங்களை அணுகாது ! [அல்குர்ஆன் 9:50,51] 
                                                                                       
அல்லாஹ்  விதித்ததை தவிர வேறொன்றும் எங்களை அணுகாது.
அவன்தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று நபியே!நீர் கூறும்,
இறைநம்பிக்கையாளர் அல்லாஹ்வின்  மீதே பரிபூரண நம்பிக்கை 
வைப்பார்கள். [அல்குர்ஆன் 9:50,51] 
மேலும்  அல்லாஹ் கூறுகிறான் !

பூமியிலோ  அல்லது  உங்கள் வாழ்விலோ நிகழ்கின்ற எந்தச் சம்பவமும்,
அதனை நாம் நிகழச் செய்வதற்கு முன்னரே{ லவ்ஹுள் மஹ்பூல்}என்ற 
பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இல்லாமல் அதை நிகழச்செய்வதில்லை.
நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.

உங்களை விட்டுப் தவறிப் போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் 
இருக்கவும்,அவன் உங்களுக்கு அளித்தவற்றில் மீது நீங்கள்{அளவுக்கு மீறி}
மகிழாதிருக்கவும்.[இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்.}
கர்வம் கொண்டவர்கள்,தற்பெருமை கொண்டவர்கள் ஆகிய எவரையும் 
அல்லாஹ் நேசிப்பதில்லை.{அல்குர்ஆன் {57;22;23}

மேற்கண்ட ஆயத்கள் மூலம்  அபசகுனம் என்று ஏதும் இல்லை.நடப்பவை 
அனைத்தும் அல்லாஹ் முன்னரே ஏற்படுத்திய ஏற்பாட்டின்படியே 
நடக்கின்றன என்று அறிய முடிகிறது .

சிலபேர் பால்கிதாபு பார்க்கிறோம் என்று  கூறிக்கொண்டு
ஆடு, மாடு, மனிதர்கள், பொருட்கள் காணாமல் போனால்,வியாபாரம் ,நோய் வந்தால்,அல்லது தமது தேவைகள் நிறைவேற வேண்டி ஒருவரிடம் சென்று கேட்கிறார்கள்.

அவர் ஏதோ ஒரு புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு வந்து 
அதிலுள்ள கட்டங்களில் ஒன்றில் விரல் வைக்கச் சொல்கிறார்.அவர் எந்த கட்டத்தில் விரல் வைத்தாரோ அந்த கட்டத்திற்கு ஒரு விரிவுரை அதன் கீழே எழுதப்பட்டிருக்கும்.அதைப்படித்து அவர் விளக்கம் அளிப்பார்.இது போன்ற முஸ்லீம்களில் சிலர் குறிபார்கின்றனர்.இதற்கும் இஸ்லாத்திற்கும்  எந்த சம்பந்தமும் இல்லை.

இது ஜோதிடம் {ஜோசியம்}போன்றதாகும்.இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

யார் ஜோசியக்காரனிடம் சென்று அவன் கூறும் தகவலை உண்மை என 
நம்புகிறாரோ,அவர் முஹம்மது {ஸல்}அவர்களுக்கு அருளப்பட்ட இஸ்லாமிய  மார்கத்தை நிராகரித்தவர் ஆவார்.அவரது நாற்பது நாட்களின் 
தொழுகைகள் அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று நபி {ஸல்}அவர்கள் 
கூறினார்கள்.

ஒருவர் பயனமாகவோ அல்லது தமது தேவையின் நிமித்தமோ வீட்டை 
விட்டு புறப்படும்போது நல்ல [வாழ்த்துக்களை}வார்த்தைகளை செவியேற்றால் அதை நற்குறியாக{நற்சொல்}கருதிப் புறப்படவேண்டும்.

பூனைக் குறுக்கே வந்தாலும்,ஆந்தை அலறினலோ,விதவைப்பெண் 
முன்னால் வந்தாலோ நம் பயணத்தை நிறுத்தி,அதை நம்பினால் 
அது மூட நம்பிக்கையாகும்.

நாம் அனைவரும்  பால்கிதாபு,சோசியம்,சகுனம் என்று எதையும்
நம்பாமல்,எல்லாம் அவன் நாட்டபடிதான் நடக்கும் என்று உறுதியோட ஈமானோட அல்லாஹ்வுக்கு  இணைவைக்காமல் வாழ்வோமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக