தகவல் அறியும் உரிமை சட்டம்-4


எந்த ஒரு இந்தியக்குடிமகனும் இந்த சட்டத்தின்கீழ் தகவல் பெறலாம்.

•இந்தச்சட்டம் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

•அயல்நாட்டு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இந்த சட்டத்தின்கீழ் தகவல் பெறலாம்.

•இந்திய குடிமகன்கள், அயல்நாட்டு வாழ் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தகவல் பெறும் உரிமைக்காக தங்களது விண்ணப்பங்களை, அந்தந்த நாடுகளில் உள்ள நமது நாட்டின் தூதரக அலுவலகங்களில் தேவையான கட்டணத் தொகை மற்றும் அதை செலுத்தும் முறை பற்றி அறிந்துக் கொள்ளலாம்.

மத்திய அரசின் கீழ்க்கண்ட காவல்துறை மற்றும் இதரத்துறை பிரிவுகளிடம் தகவல் கோரும் உரிமை மறுக்கப்படுகிறது.


1.புலனாய்வு துறை (Intelligence Bureau)

2.மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவு (Research & analysis wing of cabinet secretariat)

3.வருவாய் புலனாய்வு இயக்ககம் (Directorate of Revenue Intelligence)

4.மத்திய பொருளாதார புலனாய்வுதுறை (Central Economic Intelligence Bureau)

5.அமலாக்கப் பிரிவு இயக்ககம் (Directorate of Enforcement)

6.போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (Narcotic Control Bureau)

7.வான் ஆராய்ச்சி நிலையம் (Aviation Research Centre)

8.சிறப்பு எல்லைப் படை(Special Frontier Force)

9.எல்லைப் பாதுகாப்பு படை (Border Security Police)

10.மத்தியக் தனிக் காவல் படை (Central Reserve Police Force)

11.இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பு படை(India-Tibetan Border Police)

12.மத்திய தொழில் பாதுகாப்பு படை (Central Industrial Security Force)

13.தேசிய பாதுகாப்பு காவலர்கள் (National Security Guards)

14.அஸ்ஸாம் துப்பாக்கி அணி (Assam Rifles)

15.சிறப்பு பணிகளுக்கான துறை (Special Service Bureau)

16.சிறப்பு துறை (குற்றவியல் புலனாய்வு துறை - அந்தமான் நிகோபார்)

17.குற்றவியல் துறை (குற்றவியல் புலனாய்வு)- 
நாகர் ஹவேலி - Nagar Haveli

18.சிறப்பு பிரிவு - லட்ச தீவு 

மேற்கண்ட பிரிவுகளிடமிருந்து தகவல் கோருவது நாட்டின் பாதுகாப்பை, அயல்நாட்டு உறவுகளை, அரசு நிர்வாகத்தை பாதிக்கும் என்பதால் மத்திய அரசு தகவல் கொடுக்க மறுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக